நாம் தமிழர் கட்சி இன்னும் 5 வருடங்களில் காணாமல் போய்விடும் -சுப.வீரபாண்டியன் காட்டம்

by Editor / 19-10-2024 11:33:49pm
 நாம் தமிழர் கட்சி இன்னும் 5 வருடங்களில் காணாமல் போய்விடும் -சுப.வீரபாண்டியன் காட்டம்

 நாம் தமிழர் கட்சி இன்னும் 5 வருடங்களில் காணாமல் போய்விடும் தென்காசியில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் காட்டம்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் திமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திராவிட மாடல் அரசு மூன்றாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில்,

காலத்திற்கு ஏற்ப உடைகள் மாறும் அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடைய விமர்சிக்கும் முன்னால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேண்டுமென்றால் டி-ஷர்ட்டும், ஜீன்ஸ்ம் வாங்கி கொடுக்க தயாராக உள்ளோம். ஆனால் உதயநிதிக்கு அது நன்றாக இருக்கும் ஜெயக்குமார் டீசட்டும் ஜீன்ஸும் அணிந்தால் பார்க்கும் பொதுமக்கள் தான் பாவம் என கிண்டலாக பேசினார்,
தொடர்ந்து அவர் பேசுகையில்,தமிழ் தாயை வாழ்த்தை மாற்றிப் பாடுவதற்கு ஆளுநருக்கு எந்த உரிமையம் கிடையாது. மேலும் தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது என சீமான் பேசி வருகிறார். ஒரு தொகுதியில் கூட டெப்பாசிட் வாங்க முடியாத நாம் தமிழர் கட்சி இன்னும் ஐந்து வருடங்களில் கட்சியே காணாமல் போய்விடும் என கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாற்றை தவறாக பேசி வருவதாகவும் அந்த வகையில் அவருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்வதாகவும் தமிழ்நாட்டின் வரலாறை தெரியாவிட்டாலும் பரவாயில்லை உங்களுடைய குடும்பத்தின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என கடுமையாக சாடினார் இந்த நிகழ்ச்சியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
 

 

Tags :  நாம் தமிழர் கட்சி இன்னும் 5 வருடங்களில் காணாமல் போய்விடும் -சுப.வீரபாண்டியன் காட்டம்

Share via