கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

by Editor / 23-08-2022 03:52:45pm
 கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பீகாரை சேர்ந்த அலோக் குமார் என்ற  மாணவர் நடுவீரப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். செமஸ்டர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லாமல் அலோக் குமார் மட்டும் விடுதியிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட மாணவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டனர்.

 

Tags :

Share via