ஆட்டோ மீது கார் மோதி விபத்து
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிப்பட்டி சாலையில் ஆட்டோ மீது கார் மோதி விபத்தானது. இதில் ஆட்டோ ஓட்டிச் சென்ற பாலு என்பவர் காயம் அடைந்தார். பின் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :