குமராபாளையத்தில் மேம்பாலம்  சின்ராஜ் எம்பி தகவல்

by Editor / 13-01-2023 10:40:27pm
குமராபாளையத்தில் மேம்பாலம்  சின்ராஜ் எம்பி தகவல்

குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் புறவழிச்சாலை பணிகளை ஏகேபி சின்ராஜ் எம்பி ஆய்வு செய்தார் இதுகுறித்து சின்ராஜ் எம்பி அளித்த பேட்டியில் கூறியதாவது
குமராபாளையம் தொகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சாய ஆலைகளை ஆய்வு செய்தேன். இதில் விதி மீறிய சாய ஆலயங்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு சாய் ஆலைகள் மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது பள்ளிபாளையம் பகுதியில் பொங்கல் விழா முடிந்து ஆய்வு செய்ய உள்ளேன்
நாமக்கல் மாவட்டத்திலிருந்து தஞ்சை வரை செல்லக்கூடிய காவிரி ஆற்றில் சாயக் கழிவுகள் கலப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு மாதம் முன்பு ஆய்வு செய்து 45 சாய ஆலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் சரியாக செய்து உள்ளனரா? என ஆய்வு செய்து வந்ததில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது அதனை திருத்தம் செய்ய வேண்டும் என சாய ஆளை அதிபர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவு விட்டுள்ளேன் சேலம் கோவை புறவழிச்சாலை குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே பிரிவு சாலையில் அதிக விபத்துக்கள் நடந்து வருவதால் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தேன் தற்போது அமைச்சர் உத்தரையின்படி இந்த இடம் மதிப்பீடு செய்யப்பட்டு 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது ஒரு மாத காலத்தில் டெண்டர் விடப்பட்டு மாற்று மாத முடிவில் பணிகள் துவங்கும் அதிலிருந்து ஏழு மாத கால அளவில் பாலம் பணிகள் நிறைவு பெறும் இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via