அடுத்தடுத்து 4 கார்கள் மோதல்

by Staff / 29-05-2023 02:42:14pm
 அடுத்தடுத்து 4 கார்கள் மோதல்

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் மேம்பால பணியின் காரணமாக ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் அடுத்தடுத்த நான்கு வாகனங்கள் விபத்தில் சிக்கின. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்களில் செல்லும் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை சென்னை நோக்கி திரும்புவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மேம்பால பணியானது நடந்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை வாகனங்களின்போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலில் அடுத்தடுத்த நான்கு கார்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இது குறித்து தகவல் அறிந்து வந்த நகாய் ஊழியர்கள் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

 

Tags :

Share via