கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் தாக்கிய தூசுப் புயல்
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் வீசும் தூசு புயலால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கிரபொலீஸ் பொலிவிழந்து காட்சியளிக்கிறது.
வட ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பிய தூசிப் புயல் மெல்ல பரவி ஐரோப்பிய நாடுகளில் பதம்பார்த்து வருகின்றது.
செந்நிற போர்வை போர்த்தியது போல் நகர் முழுவதும் ஆரஞ்சு வர்ணத்தில் காட்சியளிக்கிறது.
கட்டடங்களில் படியும் தூசிகளை சுத்தப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர் புயலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தும் காணப்படுகிறது.
Tags :