டெல்லியில் தீ விபத்து தொடர்பாக 2 பேர் கைது
தீப்பிடித்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் கட்டிடத்தின் உரிமையாளர் தேடிவருகின்றனர். டெல்லி முண்டகா மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் நேற்று மாலை நேர்ந்த பெரும் தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மேலும் இருபத்தி ஒன்பது பேரை காணவில்லை கட்டிடத்தின் முதல் தளத்தில் பற்றிய தீ மேலுள்ள இரண்டு தளங்களிலும் பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது .தீத்தடுப்பு பாதுகாப்புக்கான ஒப்புதல் பெறாத அந்த கட்டிடத்தில் அலுவலகத்தில் நடத்திய கண்காணிப்பு கேமரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஹரிஷ் கோயல் வருண் கோயல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கட்டிடத்தின் உரிமையாளரானமனிஷ் லாக்ரா என்பவரை தேடி வருகின்றனர்.
Tags :