பிரதமர்மோடிகன்னியாகுமரி வருகை 5 அடுக்கு பாதுகாப்புடன் 3000 போலீசார் குவிப்பு.
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்கள் சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது - 5 அடுக்கு பாதுகாப்புடன் 3000 போலீசார் இன்று குவிக்கப்பட உள்ளனர் கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் வலையதுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது -பிரதமா் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாா், மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையிலான போலீஸாரும் விவேகானந்தா் மண்டபம், பூம்புகாா் படகுத்துறை, அரசு விருந்தினா் மாளிகை வளாகம் ஆகிய இடங்களில் ஆய்வில் ஈடுபட்டனா்.
Tags : பிரதமர்மோடிகன்னியாகுமரி வருகை 5 அடுக்கு பாதுகாப்புடன் 3000 போலீசார் குவிப்பு.