தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரைகள் 14.03.2022 முதல் 19.03.2022 வரை வழங்கப்படுகிறது.

by Editor / 13-03-2022 11:32:21pm
தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரைகள் 14.03.2022 முதல் 19.03.2022 வரை வழங்கப்படுகிறது.

தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பினிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் தவிர) 14.03.2022 முதல் 19.03.2022 வரை (செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர) மற்றும் விடுப்பட்டவர்களுக்கு 21.03.2022 அன்று அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.
மேற்படி முகாமானது அனைத்து துணை சுகாதார நிலையங்கள். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவைகள் மூலமாக சுகாதார பணியாளர்கள். அங்கன்வாடி
பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. 1 லிருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது உடையவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரையானது காலை 9.00 மணி முதல் 2.00 வரை வழங்கப்படும்.இதனை காலை சிற்றுண்டிக்கு பிறகு அல்லது மத்திய உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

Tags : National Deworming Tablets are offered from 14.03.2022 to 19.03.2022.

Share via