போதை மாத்திரை :திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

by Editor / 04-12-2022 08:21:01am
 போதை மாத்திரை :திருப்பூர் மாவட்டத்தில் மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் கடந்தவாரம், 2 வாலிபர்கள் போதை மாத்திரை கேட்டு மருந்
துக்கடைக்காரரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வடக்கு போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனைநடத்தினார்கள். போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். மருந்துக்கடைகளில் உள்ள மாத்திரைகளின் விவரம், அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சைக்கு பயன்படுத் தும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவது தெரி வந்துள்ளது. அதுபோன்ற மருந்துகள் டாக்டரின் பரிந் துரை சீட்டு இல்லாமல் வினியோகம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். 
மருந்துக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் பட்டி யல், இருப்பில் உள்ள மருந்துகள் உள்ளிட்ட விவரங் களை ஆய்வு செய்தார்கள். 

 

Tags :

Share via