சேத்தியாத்தோப்பு அருகே பெட்ரோல் பங்க் அருகே எரிந்த லாரி

by Editor / 05-10-2021 09:54:14am
சேத்தியாத்தோப்பு அருகே பெட்ரோல் பங்க் அருகே எரிந்த லாரி

சேத்தியாத்தோப்பு அருகே பெட்ரோல் பங்க் அருகில் லாரி டயர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி பெட்ரோல் பங்க் அருகே நேற்று மாலை 5.00 மணியளவில் லாரி வந்தது. இதன் பின் பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

பெட்ரோல் பங்க் அருகில் லாரி எரிந்ததால் அருகில் வசித்த மக்கள் அலறியடித்து ஓடினர். தீயை கட்டுப்படுத்தியதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த எடைமணல் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சம்பத், 42; இவர் இரு தினங்களுக்கு முன் டி.என். 57 பி. 6786 எண்ணுள்ள லாரியில் பூம்புகாரில் மீன் லோடு ஏற்றிக் கொண்டு, கேரளாவில் இறக்கி விட்டு வந்தார். நேற்று மாலை மீண்டும் பூம்புகாருக்கு மீன் லோடு ஏற்றச் சென்ற போது தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது.

 

Tags :

Share via