நிலத் தகராறில் சித்தி,தம்பியை கடப்பாரையால் குத்திக்கொலை செய்த சகோதரர்கள்

by Editor / 30-05-2022 06:42:54am
 நிலத் தகராறில் சித்தி,தம்பியை  கடப்பாரையால் குத்திக்கொலை செய்த சகோதரர்கள்

திருவாரூர் மாவட்டம்  குடவாசல் அருகே செருகளத்தூர் கிராமத்தில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி அலங்காரமேரி (50) மகன் அஜய் (24) ஆகியோர் வசித்து வருகின்றனர்.அதே பகுதியில் வசித்து வருபவர்  பாஸ்கரின் அண்ணன் மகன்கள்  அன்பழகன்(40),செபஸ்டின் (35)   இவர்களுக்கும் பாஸ்கரன் குடும்பத்துக்குமிடையே பூர்வீக இடம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்தது. 

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அடிக்கடி இரண்டு குடும்பத்துக்கும்  இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பாஸ்கர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி அலங்காரமேரி மற்றும் மகன் அஜய் ஆகியோருக்கும் அவரது அண்ணன் மகன்களுக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அன்பழகன்  மற்றும் அவரது தம்பி செபஸ்டியன் ஆகிய இருவரும் அருகில் இருந்த கடப்பாறையால் தாக்கியதில்  அலங்காரமேரியும் அவரது மான் அஜய்யும் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  நிலத் தகராறில் சித்தி,தம்பியை  கடப்பாரையால் குத்திக்கொலை செய்த சகோதரர்கள் அன்பழகன் மற்றும் செபஸ்டியன் ஆகியோர்  தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. 

உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றிய குடவாசல் காவல்துறையினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து தப்பி ஓடிய இருவரையும் குடவாசல் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

Tags : Brothers stabbing Siddi and brother to death in a land dispute

Share via