சிறுமி பலாத்காரம் செய்த நபருக்கு தாயே உடந்தை

by Admin / 01-04-2022 12:00:47am
 சிறுமி பலாத்காரம் செய்த நபருக்கு தாயே உடந்தை

கன்னியாகுமரி  நித்திரவிளை  சேர்ந்தவர் ராமசாமி. இவர்மனைவி சுனிதா மற்றும்ன மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.  ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்சனையால் படுத்த படுக்கையாகியுள்ளாா் 


சுனிதா தான் வேலை பார்க்கும்  கடை உரிமையாளர் ராஜையனுடன் நெருங்கி பழகி வந்ததாகவும், வாரம் தோறும் ஞாயிற்று கிழமை வீட்டிற்கு வரும் அவர் தாயுடன் தனிமையை கழிந்து வந்ததாகவும்,  ஜனவரி  23-ம் தேதி ஞாயிற்று கிழமை வீட்டிற்கு வந்த ராஜையன் தன்னை அறைக்குள் அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

 இதுகுறித்து தாயிடம் கூறிய போது அங்கிளுக்கு உன்மேல் ஆசைஎன்று கூறி வெளியே சொல்லாதே என்று௯றியதாகவும்   கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்று கிழமை தோறும் வீட்டிற்கு வரும் ராஜையன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் சிறுமி,  கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை மீட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்சிறுமியை மீட்டு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜையன்,  உடந்தையாக இருந்த  தாய் ஆகியோர் மீது போக்ஸோ   வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். 

 

Tags :

Share via