ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சு. வெங்கடேசன் கண்டனம்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த அம்பேத்கரிய செயல்பாட்டாளரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான ஆம்ஸ்ட்ராங்க் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அரசு கொலையாளிகளுக்கு விரைந்து தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அவரது தொண்டர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
Tags :