தென்காசி மாவட்டத்தில் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
தென்காசி மாவட்டத்தில் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென தென்காசி தெற்குமாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்த நிலையில் ஆட்சியர் இன்று விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.தென்காசி மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகள் மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வரும் 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று சுவாமிதோப்பு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் தகவல்.
Tags : Local holiday on the 4th in Tenkasi district