ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்

by Editor / 30-05-2022 06:34:58am
 ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை என்ற இடத்தில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் நான்கு நாட்கள் திவ்ய தரிசனத்திற்காக தென்மாவட்ட ஆலயங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்று வீடு திரும்பும் பொழுது இந்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது இதில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களும் சுமார் 8 ஆண்களும் என 18 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார் .இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காயமடைந்த அனைவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : More than 20 people were injured when a bus returning from a spiritual trip overturned on the side of the road

Share via