மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

by Staff / 27-09-2022 01:07:11pm
மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
மதுரை: கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடி துவக்கப்பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால் சுற்றுச்சுவர் கட்ட கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். கருங்காலக்குடியில் 114 வருடங்களாக செயல்படும் துவக்கப்பள்ளியில் 173 மாணவர்கள் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் ஏற்கனவே இருந்த சுற்றுச்சுவரை இடித்து விட்டு புதிய சுவர் கட்டித் தருவதாக கூறி ஊராட்சி சார்பில் இடிக்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் பாதி கட்டியதோடு நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. சுற்றுச்சுவர் கட்ட பள்ளிக் கல்வித் துறை, பி. டி. ஓ. , க்களுக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ரூ. 23. 70 லட்சம் ஒதுக்கி நிலுவையில் உள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
 

 

Tags :

Share via