சென்னை காவல் ஆணையராக பதவி ஏற்றாா் அமல்ராஜ் .
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பேஜ் அதிகாரி இவர். இதற்கு முன் சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக்கிற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக பதவி ஏற்றியுள்ள அமல்ராஜ் இதற்கு முன்பு தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றி வந்து கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சேலம் கோயம்புத்தூர் திருச்சி ஆகிய நகரங்களில் காவல் ஆணையராக பணிபுரிந்துள்ளார் தமிழ்நாடு காவல் அகதமியின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்திருந்தவர். இந்திய ஜனாதிபதியின் சிறந்த சேவைக்கான காவல் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















