களத்தில் இறங்கிய எஸ் பி, 4000 லிட்டர் சாராயம் அழிப்பு

by Staff / 09-03-2024 02:25:08pm
களத்தில் இறங்கிய எஸ் பி, 4000 லிட்டர் சாராயம் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், உதவி ஆய்வாளர்கள் பிரதீப்குமார், பாலமுருகன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வாரம் மற்றும் தகரை கிராமங்களின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 20 பேரலில் சுமார் 4, 000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் லாரி ட்யூபுகளில் 140 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via