6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: கமிஷனர் உத்தரவு
சேலம் மாநகரில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அம்மாபேட்டை சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் அன்னதானப்பட் டிக்கும், அங்கு குற்றப்பிரிவில் பணியாற்றிய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கணேசன் அஸ்தம்பட்டிக்கும். அங்கு சட்டம். ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அம் மாபேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பேபி, அன்ன தானப்பட்டி குற்றப்பிரிவுக்கும், அங்கு சட்டம், ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய சின்னதங்கம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய ராணி வெடிகுண்டு கணடறிந்து செயல் இழக்க செய்யும் தடுப்பு பிரிவுக்கும் மாற் றப்பட்டனர்.
மேலும் கிச்சிப்பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற் றிய சத்தியமூர்த்தி கருப்பூருக்கும். அங்கு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றிய ராஜா கிச்சிபாளையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்தார்.
Tags :