4 மாத பெண் குழந்தை கடத்தல்

by Staff / 09-03-2024 02:16:13pm
4 மாத பெண் குழந்தை கடத்தல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று நுழைந்து குழந்தைகளைக் கடத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விளக்கங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகில், சாலையோரமாக வேலூரைச் சேர்ந்த சந்தியா என்ற பெண் தனது 4 மாத பெண் குழந்தையுடன் யாசகம் பெற்று வந்துள்ளார். நேற்று இரவு தனது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்த அவர் காலையில் தனது குழந்தை காணாமல் போனது குறித்து போலீசிடம் தகவல் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

 

Tags :

Share via