மும்மொழிக் கொள்கை.. அண்ணாமலைக்கு தமிழக அரசு பதிலடி

by Staff / 14-01-2024 05:11:56pm
மும்மொழிக் கொள்கை.. அண்ணாமலைக்கு தமிழக அரசு பதிலடி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பதுபோல, ஒருபோதும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை; இருமொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுக் கொடுப்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது; இது தேசிய கல்விக் கொள்கையின் திட்டம் என்றும் விரைவில் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு கொண்டுவரும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

 

Tags :

Share via