பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் பலி
ஹரியானாவில் இன்று நடந்த பயங்கர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் விடுமுறையை பொருட்படுத்தாமல் இன்று உள்ளூர் ஜிஎல் பப்ளிக் பள்ளியை அதிகாரிகள் திறந்தனர். மாணவர்களை ஏற்றிச் செல்ல பள்ளி பேருந்து வந்துள்ளது. நர்னால் அருகே உள்ள உன்ஹானி கிராமம் அருகே பேருந்து கவிழ்ந்தது. அதில் இருந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Tags :