கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு மாணவியான இவருக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருடன் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்நிலையில் இன்று கழுத்தில் தாலியுடன் மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகள் நல அலுவலகம், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், மாணவியை திருமணம் செய்த தச்சு தொழிலாளி, அவரது பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :