சித்திரைத்திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் சங்கீதா உத்தரவு.

by Editor / 18-04-2024 11:58:41pm
சித்திரைத்திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் சங்கீதா உத்தரவு.

மதுரை மாநகரில் சித்திரைப் பெருவிழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை அந்த நாட்களில் 24x7 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 
பொதுமக்கள் சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சித்திரை திருவிழா கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

 

Tags : சித்திரை திருவிழா

Share via