போதையில் வாகனங்களை அடித்து உடைத்த 2 பேர் கைது..

by Staff / 16-11-2023 12:57:02pm
போதையில் வாகனங்களை அடித்து உடைத்த 2 பேர் கைது..

சென்னை கொடுங்கையூரில் கார், ஆட்டோ உள்ளிட்ட 20 வாகனங்களை மது போதையில் இரண்டு வாலிபர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்த மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது, குற்றவாளிகளான ஜாக்கி மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவருக்கும் கை, கால் முறிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via
Logo