சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

by Admin / 13-08-2021 03:07:56pm
சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் குச்சி மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து கருகியது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டி கிராமத்தில் ஹரி கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஹரி மேட்ச் ஒர்க்ஸ் என்ற தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பணி முடிந்து அனைவரும் சென்ற நிலையில் இரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் குச்சி மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து கருகியது.

தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். தீயை அணைக்க முடியாததால் அருகிலுள்ள சிவகாசி தீயணைப்புத்துறையினர் வரவழைத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இரவு நேர தீவிபத்து என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த தீவிபத்தில் சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் தீக்குச்சிகள் எரிந்து கருதியது.

இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via