சாத்தூரில் பா. ம. க கட்சியினர் மாவட்ட தலைவர் டேனியல் தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Staff / 15-02-2024 01:01:59pm
சாத்தூரில் பா. ம. க கட்சியினர் மாவட்ட தலைவர் டேனியல் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வன் எழுதிய புத்தகம் தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமாவை. தமிழ்செல்வன் தனது முகநூல் பக்கத்தில்
சாதி குறித்து விமர்சனம் செய்தாக கூறி புத்தக வெளியீட்டு விழாவை நடத்த விடமாட்டோம் என சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதனால் பிரச்சினை நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கையாக விழா நடைபெறும் மண்டபம் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பனியில் இருந்தனர். அப்போது பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட தலைவர் டேனியல் தலைமையில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் தமிழ்செல்வனை  கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.

சாத்தூரில் பா. ம. க கட்சியினர் மாவட்ட தலைவர் டேனியல் தலைமையில் ஆர்ப்பாட்டம்
 

Tags :

Share via