வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 358-ஆக உயர்வு

by Editor / 03-08-2024 04:41:58pm
வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 358-ஆக உயர்வு

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் 5வது நாளாக மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிர் பிழைத்தோர் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via