வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ரூ 3.36 லட்சம்  பறிமுதல். 

by Editor / 01-10-2024 04:04:01pm
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ரூ 3.36 லட்சம்  பறிமுதல். 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ 3.36 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .

 இந்த பணத்தை அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ராமகிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக பணியாளராக இருந்து கொண்டு 20 வருடங்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அலுவலக வளாக வாயிலை போலீசார் முற்றிலுமாக மூடிவிட்டு பத்துக்கு மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ரூ 3.36 லட்சம்  பறிமுதல் 

Share via