குழந்தை இல்லாததால் பிரிந்து சென்ற மனைவி... கணவன் தற்கொலை

by Staff / 24-10-2024 03:16:20pm
குழந்தை இல்லாததால் பிரிந்து சென்ற மனைவி... கணவன் தற்கொலை

புதுச்சேரியின் குச்சிப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) என்பவருக்கும் தமிழ்நாட்டின் விழுப்புரத்தை சேர்ந்த பூவிழி என்ற பெண்ணிற்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு குழந்தை இல்லாததால் பூவிழி 3 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்தார். அதிலிருந்து மனவருத்தத்தில் இருந்த சதீஷ் நேற்று முன்தினம் (அக். 22) வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via