"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை" - மு.க. ஸ்டாலின் கடிதம்

by Staff / 24-10-2024 03:18:44pm

தமிழ்நாடு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் நேற்று (அக்டோபர் 23) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 16 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், இலங்கை கடற்படைக்கு எதிராக மீனவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via