: சின்முத்திரை அப்படி என்னதான் சொல்கிறது.

இந்து மதம் மனிதர்களை நெறிப்படுத்தி ஒரு மகோதனமான வாழ்வியலை வாழ்வதற்கு வழி சொல்வதோடு இன்மை மாறி மறுமையில் புனிதமான ஆன்மாவாக வாழ்வதற்கான வழிகளையும் சொல்கிறது. இறை உருவங்களில் பல்வேறு விதமான சூட்சுமங்களை குறியீடுகளாக வெளிப்படுத்தி தம்மை வணங்குபவர்களுக்கு அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முகமாக சிலையின் வடிவமைப்பும் அமைந்து நம்மை நெறிப்படுத்துகிறது.
இந்து மதம் மூன்று மாதங்கள் என்று சொல்லக்கூடிய ஆணவம் ,கன்மம் ,மாயை இவற்றை எவன் ஒருவன் விளக்குகிறானோ அவன் இறையோடு சேர்ந்து ஐக்கியம் ஆகிறான் என்கிற தத்துவத்தை சின் முத்திரை மூலமாக தட்சிணாமூர்த்தி ஆக குரு வடிவமாக காட்சி தரும் முழு முதல் கடவுள்...
: சின்முத்திரை அப்படி என்னதான் சொல்கிறது என்றால் கட்டை விரலும் அதனோடு ஒட்டி இருக்கின்ற விரலும் இணைகின்றது ஆனால் அதற்கு அடுத்த விரல்கள் கட்டை விரலோடு ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. எவன் ஒருவன் ஆணவத்தையும் கன்மத்தையும் மாயையும் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் இறைவனோடு நெருங்க முடியாது. எவன் ஒருவன் இந்த மூன்று விளக்கப்பட வேண்டியவைகளை விட்டொழிக்கிறானோ அவன் இறைவனோடு ஐக்கியம் ஆவான் என்பதைத்தான் கட்டை விரலும் அதனோடு ஒட்டி இருக்கின்ற அந்த விரலும் இணைகிறது மற்ற விரல்கள் தனித்து நின்று இணைவதில் தடையாக இன்னொரு விரல் அமைவதன் மூலமாக கட்டை விரலோடு இணைய முடியாமல் தனித்து நிற்கின்றது. இதுதான் சின் முத்திரையின் மூலம் இறைவனோடு இணைய விரும்புகிறவர்கள் இதனை தவிர்த்து விடுங்கள் மிக எளிதாக கட்டை விரலும் அதற்கு அடுத்து இருக்கின்ற விரலும் இணைவது போன்று நீங்கள் இறைவனோடு இணைய வேண்டும் இறைவனோடு கலக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் என்கிறதை சொல்லாமல் சொல்லிக் கொடுக்கும் பாடம் தான் சின்முத்திரை.
ஆக, ஒரு மனிதன் தம் வாழ்வை மேம்பட்ட நிலையில் உயர்த்த வேண்டும் என்று விரும்புவானனால் விளக்க வேண்டிய தம்மோடு பிறந்திருக்கின்ற இல்லை ஒட்டிக் கொண்டிருக்கின்ற இல்ல தொடர்ந்து வருகின்ற இந்த மூன்றையும் நாம் வி லக்க வேண்டும். இவற்றை விளக்கினால் அசுர குணங்களும் மனித குணங்களும் மறைந்து தேவ குலமாக நாம் மாறிவிட முடியும். ஜோதிடர் சாசனத்தில் சொல்லப்படுகின்ற மனிதர்களின் கணங்களில் தேவ கணம் ,மனித கணம் ,மிருககணம் இருப்பது போல் அவரவர்கள் குணத்தை இந்த கணங்கள் பிரதிபலிக்கும் என்பதை சொல்லுவார்கள். அது போன்று நாம் மேன்மை நிலையை அடைய வேண்டுமானால் ஜின் முத்திரையை நாம் கடைபிடிக்க வேண்டும். இறைவனோடு இரண்டற கலக்க வேண்டும்.
நன்றி- பொதிகை தமிழரசன் எழுதிய தட்சணாமூர்த்தி வழிபாடு

Tags :