ரேஷன் கடைகளில் இனி புகார் பதிவேடு

by Editor / 10-07-2021 12:42:30pm
ரேஷன் கடைகளில் இனி புகார் பதிவேடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், மக்கள் புகாரளிக்க வசதியாக, புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் சூழலில் பொருள் இருப்பு இல்லை, கடை திறப்பதில்லை என்று பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. எனவே இதனை களையும் பொருட்டு தமிழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைத்து, பொதுமக்கள் புகாரளிக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகள் குறித்து இணையதளத்தில் புகாரளிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், நியாயவிலைக் கடைகளிலேயே புகார் பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் பதிவேடு முறையில் உடனடியாக புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இணையதளத்தில் புகாரளிக்கும் முறையுடன், புகார் பதிவேடு முறையும் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு துறை சார்ந்து பல்வேறு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை சரிசெய்யும் வகையில் புகார் பதிவேடு வைக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via