முதியவர்களை மீட்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

by Admin / 14-08-2021 02:09:14pm
முதியவர்களை மீட்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

 

ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களை மீட்கவும், குடும்ப உறுப்பினரால் துன்புறுத்தப்படும் பெற்றோரை மீட்டு பாதுகாக்கவும், இந்த சேவையை பயன்படுத்தலாம்.

முதியோரின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் சட்ட ரீதியான உதவி செய்யவும் வசதியாக முதியவர்களுக்கு 14567 என்ற கட்டணமில்லா  ‘ஹெல்ப் லைன்’ எண்  தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவை கடந்த ஏப்ரல் 28-ந்தேதி  முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் முதியோர் இல்லம், பராமரிப்பு மையம், பராமரிப்பாளர், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடம், வலி நிவாரண மையம் குறித்து தகவல் அளிக்கப்படும்.
 
அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்ட பாதுகாப்பு உதவியும் வழங்கப்படும். ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களை மீட்கவும், குடும்ப உறுப்பினரால் துன்புறுத்தப்படும் பெற்றோரை மீட்டு பாதுகாக்கவும், இந்த சேவையை பயன்படுத்தலாம்.

முதியோர் ‘ஹெல்ப் லைன்’ காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மூத்த குடிமக்கள் இத்தகைய சேவையை பயன்படுத்தி பயனடையலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via