கோவில்பட்டியில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட மறுநாளே மற்றொரு கொலை.

by Editor / 10-05-2024 09:15:41am
கோவில்பட்டியில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட மறுநாளே மற்றொரு கொலை.

கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் மகன் முத்துப்பாண்டி (42) பணம் கொடுக்கல் வாங்கல்  தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகர் தனது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அவரைத் தேடி சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தனியார் பள்ளி அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி , பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேடி வந்த நபர்கள் யார்? முன்விரோதமாக கொலை செய்யப்பட்டாரா? பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  நேற்று முன்தினம் புதன்கிழமை டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட மறுநாளே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று உள்ளது கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : கோவில்பட்டியில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட மறுநாளே மற்றொரு கொலை.

Share via