இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலகளித்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. முன்னதாக, தனக்கு எதிராக முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலகளிக்க கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Tags :