ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

by Staff / 18-03-2024 02:41:38pm
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

இன்று  அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் உள்ள பொதுமக்களின் வீடுகளை பாகிஸ்தான் விமானங்கள் தாக்கியதாக அவர் கூறினார். இதற்கு பழிவாங்குவோம். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via