மாணவர் விடுதி காப்பாளர் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பிஷப் தார்ப் மாணவர் விடுதி தாராபுரம் பொள்ளாச்சி சாலை சி. எஸ். ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.இங்கு 24 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர் இவர்களுக்கு பாதுகாவலாராக கோவை மாவட்டம் வால்பாறை பாராளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் வினித்குமார் (25), என்பவரை விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஓராண்டு காலமாக ஹாஸ்டல் காப்பாளராக இருந்து வருகிறார்.
காப்பாளர் வினித் குமார் வழக்கம் போல விடுதியில் மாணவர்களை பார்க்க வருவது வழக்கம் ஆனால் வரவில்லை சந்தேகம் இருந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது வினித் குமார் தங்கி இருந்த விடுதி மின்விசிறியில் போர்வையை கொண்டு தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அப்போது மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர் அப்போது தூக்கில் தொங்கியபடி வினித் குமார் இருந்துள்ளார். இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.தகவபேரில் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேதத்தை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :