சரமாரியாக தாக்கப்பட்ட மருந்து கடைக்காரர்

by Staff / 07-03-2024 12:43:38pm
சரமாரியாக தாக்கப்பட்ட மருந்து கடைக்காரர்

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள கவுர் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிலர் மருந்து கடைக்குள் புகுந்து கடைக்காரரை சரமாரியாக தாக்கினர். அவர் எதற்காக தாக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை. விற்பனையாளருடன் இருந்த இளம்பெண் அவர்களை தடுத்தாலும், அவர்கள் விடாமல் அவரை தாக்கினர். கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கேமராவின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

 

Tags :

Share via