அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு

by Staff / 04-11-2022 04:20:35pm
அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு

திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து வழக்கு ஒன்றில் உத்தரவிட்ட நீதிமன்றம், “அனுமதி இன்றி விதிமீறல்களுடன் கட்டடம் கட்டப்பட்டால் அதை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடத்தை கட்டிவிட்டு பின் அதில் உள்ள குறைகளை சரி செய்துவிடலாம் என்ற எண்ணத்தை அதிகாரிகள் ஊக்கப்படுத்தக்கூடாது. விதிமீறிய கட்டடங்களை இடிக்க ஏற்கனவே உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளது.மேலும் விதிமுறைகளை மீறி குடியிருப்புகளை கட்ட உதவிய அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via