லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகணக்கில் வராத மூன்று லட்ச ரூபாயை பறிமுதல்.

by Editor / 24-10-2024 08:19:57am
 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகணக்கில் வராத மூன்று லட்ச ரூபாயை பறிமுதல்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர் மூலமாக பத்திரப்பதிவு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த ஒரு வார காலமாக அச்சிறுபாக்கம்  சார் பதிவாளர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார்  ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில் சார் பதிவாளர் கோகுல முருக பூபதி மருத்துவ விடுப்பில் உள்ளதால் அவரது பொறுப்பில் உள்ள தலைமை எழுத்தர் ரகுநாதன் தொடர்ந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்த நிலையில் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சரவணன் தலைமையில்  8- பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் மாலை நான்கு மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டினர் அப்போது கணக்கில் வராத மூன்று லட்ச ரூபாயை பறிமுதல் செய்த செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகணக்கில் வராத மூன்று லட்ச ரூபாயை பறிமுதல்.

Share via