ஊசி மூலமாக மதுவை உடலில் செலுத்திய வாலிபர் உயிரிழப்பு
ஈரோட்டில் ஊசி மூலமாக மதுவை உடலில் செலுத்திய வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பெரியசேமூர் கள்ளன்காடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மகன் நாகராஜ் (வயது 23). கட்டிட தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. மேலும், போதை பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி இருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்தபோது நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், போதைக்காக நாகராஜ் ஊசி மூலமாக மதுவை தனது உடலில் செலுத்தி கொண்டதாலும், போதை பொருட்களை பயன்படுத்தியதாலும் சம்பவத்தன்று மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :