ராஜஸ்தானில் ஜனவரி 31–ந்தேதி வரை  பட்டாசு வெடிக்க, விற்க தடை

by Editor / 01-10-2021 03:29:52pm
ராஜஸ்தானில் ஜனவரி 31–ந்தேதி வரை  பட்டாசு வெடிக்க, விற்க தடை



ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 31ந் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.


மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதேநேரத்தில் கொரோனா 3வது அலை பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.


3வது அலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, பண்டிகை காலங்களில் தொற்று பரவாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ந்தேதி (இன்று) முதல் வரும் ஜனவரி 31ம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


பட்டாசுகளில் இருந்து வெளிவரக்கூடிய புகை மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இந்த புகையால் மேலும் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதாலும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


மேலும் கொரோனா 3வது அலை காரணமாகவும் பட்டாசு விற்பனைக்கு உரிமம் வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாசுபாடு மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் விளைவுகள் காரணமாக கடந்த ஆண்டும் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதித்திருந்தது

 

Tags :

Share via