இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

by Editor / 11-09-2022 09:35:51am
இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via