குழந்தையை புதைத்த கொடூர தாய்

by Staff / 09-09-2023 04:58:16pm
குழந்தையை புதைத்த கொடூர தாய்

உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் மூசாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புலந்தர் கிராமத்தில் இன்று பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை மண்ணில் புதைத்துள்ளார். தொடக்கப்பள்ளியின் இருமல் தோட்டத்தின் அருகில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற தம்பதியினர் குழந்தையை வெளியே எடுத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். தாயே பெற்ற குழந்தையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via