அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - பிரதமர்
ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்தியாவின் கொள்கை, வளமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது'' என அவர் தெரிவித்தார்.
Tags :