நிதி நெருக்கடி காரணமாக குடும்ப அட்டை: நிதி உதவி நிறுத்தம்
கேரளாவில் கோவிட் காரணமாக இறந்த வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மாதாந்திர 5,000 ரூபாய் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை இத்தொகை வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடி காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வருமானம் ஈட்டுபவர்கள் கோவிட் காரணமாக இறந்தால் பிபிஎல் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ 5,000 வீதம் மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. முக்கியமாக கடந்த பட்ஜெட்டில் இதற்கென எந்த தொகையும் ஒதுக்கப்படவில்லை. மாநிலத்தில் மொத்தம் 5,702 குடும்பங்கள் இந்த நிதியுதவியைப் பெறுகின்றன.
Tags :