தமிழை 2வது மொழியாக அறிமுகம் செய்ய பேசி வருகிறேன்ஆளுநர் ஆர்.என்.ரவி

by Staff / 29-11-2022 04:27:32pm
தமிழை 2வது மொழியாக அறிமுகம் செய்ய பேசி வருகிறேன்ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தமிழை இரண்டாவது மொழியாக அறிமுகப்படுத்த அம்மாநில முதல்வர்களுடன் பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் திருக்குறள் நூலை பிற மாநிலங்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் மோடி 13 இந்திய மொழிகளில் திருக்குறளை வெளியிட்டது மிகவும் பெருமை தரும் விஷயம் என்றும் கூறினார்.

 

Tags :

Share via