நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்ட மேடைக்கு மதுபாட்டில்கள் மற்றும் செருப்புவீச்சு.

by Editor / 27-02-2023 10:14:35am
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்ட மேடைக்கு மதுபாட்டில்கள் மற்றும் செருப்புவீச்சு.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்தொகுதி சார்பில் முத்துப்பேட்டையை அடுத்த சித்தமல்லி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்ளை விளக்கப்பொதுக்கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், திமுகவினர் எங்கு பார்த்தாலும் அராஜகத்திலும், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.  மேலும் தமிழகத்தில் காமராஜர் படிக்கவைத்ததாகவும், ஆனால் கலைஞர் தமிழர்களை குடிக்கவைத்ததாகவும் மேடையில் பேசிகொண்டிருந்த காளியம்மாள் மீது அப்பகுதியை சேர்ந்த திமுக குண்டர்கள் செருப்புகளை வீசியதோடு, கையில் குடிக்கவைத்திருந்த மதுபாட்டில்களை வீசி எறிந்தனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற சித்தமல்லி பகுதி திமுக பிரமுகரும், தற்போதைய டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயனின் சொந்த  ஊர் என்பதால் ஆவரது ஆதரவாளர்கள் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  மேலும் திமுகவினர் அராஜகத்தி;ல் ஈடுபடுக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர் பொதுக்கூட்ட மேடை அருகே திமுகவினர் கூடுவதை தடுக்காமல் திமுகவினர் மேற்கொண்ட அராஜக அத்துமீறல் சம்பவங்களுக்கு துணையாக இருந்துவந்ததாக நாம் தமிழர் கட்சியின் குற்றம்சாட்டினர்.        இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் .

 

Tags :

Share via